தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடன்குடி அருகே 800 கிலோ கருப்பட்டி கொள்ளை

*மினிடெம்போவில் தப்பியவர்களுக்கு வலை
Advertisement

உடன்குடி : உடன்குடி அருகே 800 கிலோ கருப்பட்டியை மர்மநபர்கள் மினிடெம்போவில் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கைபண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40). கந்தபுரம் பகுதியில் பனை தொழில் செய்து வருகிறார். 15 பனை தொழிலாளர்களை கொண்டு பனை ஏறி பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி, கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி நள்ளிரவு இவரது பதநீர் காய்ச்சும் இடமான விடிலிக்கு மினிடெம்போவில் வந்த மர்மநபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ எடையுள்ள கருப்பட்டியை மினிடெம்போவில் ஏற்றினர். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதியில் தங்கியிருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் திரளவே மர்மநபர்கள் மினிடெம்போவுடன் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மினிடெம்போவில் 800 கிலோ கருப்பட்டியை கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன கருப்பட்டியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும்.

Advertisement

Related News