தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தைலாபுரத்தில் ராமதாசுடன் ஈஸ்வரன் திடீர் சந்திப்பு

 

Advertisement

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் நேற்று திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் திடீரென சந்தித்து பேசினர். சுமார் அரைமணி நேர சந்திப்பிற்குபின் ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமதாஸ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வாய்ப்பு இல்லாமல் போனது.

தற்போது அவரது உடல் நலம் விசாரிப்பதற்காக வந்தோம். அவர் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ வாழ்த்து தெரிவித்தோம். பாமக ஒருங்கிணைந்து வலிமையான சக்தியாக இருக்க வேண்டுமென்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென நாங்கள் மனதார விரும்புகின்றோம். திமுக கூட்டணிக்கு பாமக வருவது குறித்து பேசக்கூடியது திமுக தலைவரும், ராமதாசும்தான். கூட்டணி பேசுகிற அதிகாரம் எங்களுக்கு கிடையாது.

ஜனவரி மாதத்தில்தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடக்கும். கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை விஜய் நேரடியாக சந்தித்திருக்க வேண்டும். அன்றைய தினமோ அல்லது ஒரு சில நாட்களிலோ அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக் கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement