தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை கவசம்போல் காத்த செவிலியர்கள்: மருத்துவமனை சிசிடிவியில் நெகிழ்ச்சி

கவுகாத்தி: அசாமில் நிலநடுக்கத்தின்போது தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று மாலை 4.40 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் உதல்குரி மாவட்டமாகும். இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

Advertisement

உதல்குரி மாவட்டத்தில் விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்தனர். சில மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி ஒன்றிய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில், அசாமின் நாகோன் நகரில் உள்ள ஆதித்யா தனியார் மருத்துவமனையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி ஒன்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செவிலியர்கள், உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளை பாதுகாத்தனர். அறை விளக்குகள் அணைந்து எரிந்தபோதும், பதற்றமடையாத செவிலியர்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியும், தொட்டில்களுக்கு அருகே கவசம்போல் நின்றும் நில அதிர்வு முடியும் வரை காத்திருந்தனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளைக் காத்த இந்த செவிலியர்களின் வீரச் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Related News