தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (32). பைனான்சியர். இவரது மனைவி சோலையம்மாள் (30). இவர்களுக்கு சாதனா (5), சாகனா (4) என இரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் இரு பெண் குழந்தைகளுக்கும் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழா நடந்தது. விழா முடிந்த மறுதினமான நேற்று காலை இரு பெண் குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 15 பேர் ஆட்டோ மற்றும் பைக்குகளில் வேம்பார் முகத்துவாரம் பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனர். கடலில் அலையின் சீற்றம் காணப்பட்ட நிலையில் குமாரின் தம்பியான டேனி என்பவர் குழந்தை சாதனாவை தூக்கிக் கொண்டு கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அலை சிறுமி மற்றும் டேனியை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்து வந்த போலீசார், சுமார் 3 மணி தேடி டேனி மற்றும் சாதனாவை சடலமாக மீட்டனர்.
Advertisement

Advertisement