தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகாலையிலேயே நீண்ட கியூ நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: பால் ஊற்றி வழிபாடு செய்ய 2 மணி நேரம் காத்திருப்பு

நாகர்கோவில்: ஆவணி 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். அதிகாலையிலேயே நீண்ட கியூவில் நின்று தரிசனம் செய்தனர். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று ஆவணி 3 வது ஞாயிற்றுக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்து.
Advertisement

காலை 8 மணியளவில் நாகராஜா கோயில் தெற்கு வாசலுக்கு வெளியே நீண்ட வரிசை நின்றது. பின்னர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து தலைமை தபால் நிலைய சந்திப்பு வரை வரிசையில் நின்றனர். ரூ.400க்கு சிறப்பு தரிசன டிக்கெட்டில் சென்றவர்களுக்கு 1 லிட்டர் பால் பாயாசம் சில்வர் பாத்திரத்தில் வழங்கப்பட்டது. மேலும் கோயில் பிரசாதம், தேங்காய், பழம் உள்ளிட்டவையும் வழங்கினர். ரூ.150 கட்டணத்தில் ஒரு லிட்டர் பால் பாயாசம் (தனி கவரில்) மட்டும் வழங்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

கடந்த இரு நாட்களாக, நாகர்கோவில் நகரில் காலையில் மழை பெய்தது. இன்று அதிகாலையில் லேசான சாரல் இருந்தது. அதன் பின்னர் மழை இல்லை. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்ததுடன், வெயிலும் இல்லாததால் பக்தர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றுவதற்காகவே 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தனர். கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். மருத்துவ குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Advertisement

Related News