தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்னணு கழிவுகளை நிர்வகிப்பதில் சிறப்பு கவனம்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: மின்னணு கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பதில் கல்லூரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் நிலுவையில் உள்ள கோப்புகளை முறையாக முடிக்கவும், பொது சேவை வழங்கல் மற்றும் அலுவலக தூய்மையை மேம்படுத்தவும் சிறப்பு பிரசாரம் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்தது.

Advertisement

அதன்படி சிறப்பு பிரசாரம் 5.0 திட்டத்தின்கீழ் உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய விவகாரங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சிறப்பு பிரசாரம் 5.0 திட்டத்தின்கீழ் செப்டம்பர் 15 முதல் 30ம் தேதி வரை ஆயத்த நிலையாகவும், அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை செயல்படுத்தும் நிலையாகவும் நிர்ணயித்து பணிகளை மேற்கொள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தேவையற்ற கழிவுகளை அகற்றுவது உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு அந்த பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு மின்னணு கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பது எப்படி என்பதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement