தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடிவரவு |பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம்!

புதுடெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிப்பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இந்த இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. பயணத்திற்கு முன்போ அல்லது வருகையின் போது ஆன்லைனில் எளிதாக இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம். இந்த இ-அரைவல் அட்டை என்பது இந்திய குடிமக்கள் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தேவையில்லை. இது முழுமையாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளம் வழியாகவும், சு-சுவாகதம் என்ற செல்போன் செயலி வழியாகவும், இந்திய விசா ஆன்லைன் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். தங்களது விமானம் வெளிநாட்டிலிருந்து புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் சேமிக்கப்படுவதால், விமான நிலையத்தில் நேரம் வீணாவதை தவிர்க்கலாம். குடிவரவு அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் பயணியின் தகவல்களை உடனே அணுகி சரிபார்க்க முடியும். அதே நேரம், இந்த இ-அரைவல் அட்டை விசா கிடையாது. சுற்றுலா, வணிகம், படிப்புக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக விசா வைத்திருக்க வேண்டும். இந்த இ-அரைவல் அட்டை என்பது, நாம் இந்தியா வருவதற்கு முன்னதாக தேவைப்படும் ஒரு அனுமதிச் சீட்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News