தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தசராவை கொண்டாடும் வகையில் அக்.3ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: தசரா பண்டிகை கொண்டாடும் வகையில் அக்டோபர் 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் மகிமைதாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

Advertisement

எதிர்வரும் அக்டோபர் 1ம் தேதி (புதன்கிழமை) ஆயுத பூஜையும், 2ம் தேதி (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தியையும், விஜயதசமியையும் முன்னிட்டு அரசு விடுமுறை தினங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) பணிநாளாகவும் அதற்கடுத்த தினங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என அரசு விடுமுறை தினங்களாகவும் உள்ளது.

தசரா பண்டிகையையொட்டி நீதிமன்றங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் 27ம் தேதி (நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தசரா பண்டிகையை கொண்டாடவும், தீபாவளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏதுவாக, பணி நாளான அக்டோபர் 3ம் தேதியை (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு சிறப்பு பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement