தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தசரா திருவிழாவில் பெண்களை செல்போனில் படம் பிடித்தவருக்கு வெட்டு

பெரம்பூர்: மூலகொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீ (20), மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வியாசர்பாடி பி.வி.காலனி 23வது தெரு அருகில் நடந்த தசரா திருவிழாவை பார்க்க சென்றுள்ளார். அங்கு, சாமி வேடமிட்ட நபர்களை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், ஸ்ரீயிடம் செல்போனை கேட்டுள்ளனர்.

Advertisement

கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீ, தனது பைக்கை எடுக்க சென்றபோது அவரை சரமாரி கத்தியால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த ஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (20), லோகேஷ் (20), திருநாவுக்கரசு (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், திருநாவுக்கரசுவின் தங்கைகளை ஸ்ரீ, தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்து செல்போனை கேட்டபோது கொடுக்காததால் 3 பேரும் கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement