குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜெகநாதர் ரத யாத்திரையின்போது பாகனின் கட்டுப்பாட்டை மீறி யானைகள் மக்கள் கூட்டத்திற்குள் ஓடியதால் பரபரப்பு..!!
Advertisement
இதனை கண்ட பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யானைக்கு உடனடியாக மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் அவர் கூறியதாவது, இரண்டு பெண் யானைகள் கூட்டத்திலிருந்து மெதுவாக விரட்டப் பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் கூட்டம், சிறிது நேரத்தில் பதற்றமடைந்தாலும், விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆண் யானை இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நடந்து வரும் ரத யாத்திரை ஊர்வலத்தில் மீண்டும் சேராது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
Advertisement