தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

துர்கை நம்மியந்தல் அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

*கலெக்டர் மரக்கன்று நட்டார்

திருவண்ணாமலை : துர்கை நம்மியந்தல் அரசு பள்ளியில் நேற்று நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று, காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவில், கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஒரு நாள் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்து கலெக்டர் விளக்கினார்.

மேலும், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும், மாலையில் தோட்டம் அமைத்தல், கழிவு மேலாண்மை, வாழ்வியல் வழிமுறைகள் குறித்த களப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட பசுமை இயக்கம் சரண்யாகுமாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related News