தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துரந்த் கோப்பை காலிறுதி மோகன் பகான் -பஞ்சாப் பலப்பரீட்சை: பெங்களூர், கேரளா மோதல்

ஜாம்ஷெட்பூர்: துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், ஷில்லாங், கோக்ராஜ்ஹர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டியில், 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
Advertisement

கோக்ராஜ்ஹரில் நடந்த முதல் காலிறுதியில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தையும், ஷில்லாங்கில் நடந்த 2வது காலிறுதியில் ஷில்லாங் லஜோங் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் எஞ்சிய 2 காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. ஜாம்ஷெட்பூரில் நடக்கும் 3வது காலிறுதியில் மோகன் பகான்-பஞ்சாப் எப்சி அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மோகன் பகான் அதிக முறை(17) துரந்த் கோப்பையை கைப்பற்றி உள்ளது. கூடவே ஐஎஸ்எல் தொடரிலும், துரந்த் கோப்பை தொடரிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக மோகன் பகானே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 11 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மோகன் பகான் 8ஆட்டங்களில் வென்றுள்ளது. பஞ்சாப் ஒரே ஒரு ஆட்டத்தில் வெல்ல, எஞ்சிய 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதேபோல் கொல்கத்தாவில் நடைபெற உள்ள 4வது காலிறுதி ஆட்டத்தில் பெங்களூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் களம் காணுகின்றன.

இந்த அணிகள் இதுவரை மோதிய 18 ஆட்டங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே துரந்த் கோப்பையில் சந்தித்துள்ளன. அதில் பெங்களூர் அணிதான் வென்றது. மொத்ததில் பெங்களூர் 10, கேரளா 4 ஆட்டங்களில் வென்றுள்ளன. எஞ்சிய 4 ஆட்டங்கள் டிராவாகின. பெங்களூர் இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் 2வது முறையாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்கும்.

Advertisement

Related News