தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துரந்த் கோப்பை கால்பந்து முதல் முறையாக நார்த்ஈஸ்ட் சாம்பியன்

கொல்கத்தா: துரந்த் கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணியை வீழ்த்திய நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய ராணுவத்தின் சார்பில் நடைபெறும் துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. போட்டிகள் கொல்கத்தா, கோக்ராஜ்ஹர், ஷில்லாங், ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் நடந்தன.
Advertisement

மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மோகன் பகான் எஸ்ஜி - நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணிகள் பைனலுக்கு முன்னேறின. துரந்த் கோப்பையை 17 முறை வென்றுள்ள நடப்பு சாம்பியனான மோகன் பகான் அணி 30வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியது. அதே சமயம் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமான நார்த்ஈஸ்ட் அணி, துரந்த் கோப்பையில் நேற்று முதல் முறையாக பைனலில் களமிறங்கியது. தொடக்கத்தில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி நார்த்ஈஸ்ட்டை திணற வைத்த மோகன் பகான் அடுத்தடுத்து 2 கோல் போட்டு 2-0 என முன்னிலை பெற்றது.

அந்த அணியின் கம்மிங்ஸ் (11வது நிமிடம்/பெனால்டி), சாஹல் (45 5’) கோல் போட்டு அசத்தினர். எனினும், 2வது பாதியில் கடும் நெருக்கடி கொடுத்த நார்த்ஈஸ்ட் அணிக்கு அஜாரையே (55வது நிமிடம்), கில்லர்மோ (58’) கோல் அடித்து 2-2 என சமநிலை ஏற்படுத்தினர். விறுவிறுப்பான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கபட்டது. அதில் நார்த்ஈஸ்ட் 4-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று முதல் முறையாக துரந்த் கோப்பையை முத்தமிட்டது.

Advertisement

Related News