தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துரந்த் கோப்பை கால்பந்து நார்த் ஈஸ்ட் எப்சி மீண்டும் சாம்பியன்: 6 கோல் அடித்து சாதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் எப்சி அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கொல்கத்தாவில் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 134வது துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. அதில், நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் எப்சி அணியும், டைமண்ட் ஹார்பர் எப்சி அணியும் மோதின.

Advertisement

துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து கோல்களை போட்டனர். அந்த அணியின் அஷீர் அக்தர் 30வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். அவரை தொடர்ந்து பார்திப் கோகோய் 45 1, தோய் சிங் 50, ஜெய்ரோ 81, ஆண்டி 85, அலாதின் அஜாரே 90 3வது நிமிடங்களில் கோல்களை அடித்து அசத்தினர்.

மாறாக, டைமண்ட் ஹார்பர் அணியின் ஜாபி ஜஸ்டின், 68வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே போட்டார். அதனால், 6-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணி இமாலய வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இந்த தொடரில், நார்த் ஈஸ்ட் அணியின் அலாதின் அஜாரே 8வது கோல் போட்டு சாதனை படைத்தார். அவருக்கு, கோல்டன் பால், கோல்டன் பூட் விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement