தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பூடான் நாட்டின் ராணுவத்தின் உயர்ரக வாகனங்கள் சமீபத்தில் ஏலமிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அந்த வாகனங்கைள அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை மறைத்தும், விற்பனை தொகையை மறைத்தும் ஒன்றிய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சோதனை; பூடானில் நும்கூர் என்றால் வாகனம் என அர்த்தம்.

Advertisement

அந்த வகையில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சியில் உள்ள துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகள் உள்பட மொத்தம் 30 இடங்களில் இன்று திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officials)அதிரடியாக சோதனையை மேற்கொண்டுள்ளனர். பிரித்விராஜ் வீட்டில் அந்த கார் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News