தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துலீப் கோப்பை கிரிக்கெட்: ஜடேஜா, சிராஜ் விடுவிப்பு

மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் செப்.5ம் தேதி தொடங்கும் போட்டிகள், பின்னர் 2ம் கட்டமாக ஆந்திரமாநிலம் அனந்தப்பூரில் நடைபெற உள்ளன. உள்ளூர் போட்டிகளிலும் நட்சத்திர வீரர்கள் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டதையடுத்து, புச்சி பாபு கோப்பையில் ஷ்ரேயாஸ் உட்பட பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக துலீப் கோப்பை (4 நாள் போட்டி) தொடரில் ஷ்ரேயாஸ், அக்சர், இஷான், அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப், கில், ராகுல், துபே, குல்தீப், ருதுராஜ் என பல முன்னணி வீரர்கள் ஏ, பி, சி, டி என 4 அணிகளில் இடம் பிடித்துள்ளனர்.
Advertisement

இந்த அணிகளுக்கு முறையே சுப்மன் கில், அபிம்ன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன்களாக செயல்படுவார்கள். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் முதல் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி அணியில் சிராஜுக்கு பதிலாக நவ்தீப் சைனி, சி அணியில் உம்ரான் மாலிக்குக்கு பதிலாக கவுரவ் யாதவ் இடம் பிடித்துள்ளார். பி அணியில் இருந்து ஆல் ரவுண்டர் ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்களில் பி அணியில் நாராயண் ஜெகதீசன், சி அணியில் பாபா இந்திரஜித், சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement

Related News