தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி: சொந்த ஊரில் தாய் தற்கொலை முயற்சி

Advertisement

நெல்லை: துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை - மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் உள்ள மினிக்குடி தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (55). இவரது மனைவி விமலா. இவர்களது ஒரே மகன் கிருஷ்ண சங்கர் (22). மாதவன் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அங்கு தங்கி வந்தார். அவரது மகன் கிருஷ்ண சங்கர் சென்னையில் சிஏ படித்து வந்தார்.

இவர் இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய்க்கு சென்றிருந்தார். ஒரு வார விடுமுறையை அங்கு கழிக்க விரும்பிய கிருஷ்ண சங்கர் கடந்த 12ம்தேதி, தந்தை தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதியில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மாதவனும் இறங்கியபோது, அவரும் மூழ்கினார். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இருவரின் உடலும் துபாயிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு நெல்லையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ண சங்கரின் தாய் விமலா மற்றும் அவரது உறவினர்கள் இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. பின்னர் உறவினர்களால் சிந்துபூந்துறை மின்சாரச் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கிருஷ்ண சங்கருடன் பள்ளி - கல்லூரிகளில் படித்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கணவரும், மகனும் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த துக்கம் தாங்க முடியாமல் விமலா தன் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

Advertisement

Related News