தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிடிஎச் சேவை குறைபாடு விவகாரம்; வாடிக்கையாளருக்கு ரூ.67,000 இழப்பீடு: ஏர்டெல் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிடிஎச் சேனல் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூரை சேர்ந்த வழக்கறிஞர் டி.கே.எஸ்.காந்தி என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் டிடிஎச் சேவை மூலம் மாதம் ரூ.1099 திட்டத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலம் 350 சேனல்கள், இண்டர்நெட் மற்றும் தொலைப்பேசி இணைப்புகளை பெற்று பயன்படுத்தி வந்தேன்.

Advertisement

ஆனால், ஏர்டெல் நிறுவனம் மாதம் ரூ.1099க்கு பதிலாக கூடுதலாக 600 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். மேலும் இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திடம் புகார் அளித்தும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்கவில்லை. எனவே, தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை திரும்ப வழங்குமாறும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு சென்னை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரியாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தது சேவை குறைப்பாடுதான். எனவே, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், கூடுதல் கட்டணம் 7 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 67 ஆயிரம் ரூபாயை 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Advertisement