தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் தங்கிய குடியிருப்புகளில் சோதனை: துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி

சென்னை: தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதியில் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் காவல் துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ளனர். குறிப்பாக காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் தங்கியுள்ளனர்.
Advertisement

அந்த மாணவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில், 2 உதவி ஆணையர்கள், 5 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட போலீசார் கூடுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்கி உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், வீடுகள், ஓட்டல்கள், கடைகளில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் உள்ளதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் எதுவும் சிக்கியது என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரிவிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement

Related News