தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படிக்க சென்ற இடத்தில் போதை வழக்கில் கைது: ‘ரஷ்யாவுக்கு திரும்புவதை விட சிறையே மேல்’: உக்ரைனிடம் சரணடைந்த இந்தியரால் பரபரப்பு

புதுடெல்லி: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவத்தில் இணைந்த இந்திய இளைஞர், உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்து வருவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ரஷ்யாவிடம் பலமுறை ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன், இந்தியர்கள் இதுபோன்ற தவறான வலையில் சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகிறது.

Advertisement

இதுவரை ரஷ்யாவுக்காகப் போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும் 27 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் (22) என்ற இந்தியர், ரஷ்யாவுக்காகப் போரிட்ட நிலையில், உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ளார்.

ரஷ்யாவில் படிக்கச் சென்ற இவர், போதைப் பொருள் வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். தண்டனையிலிருந்து தப்பிக்க, ராணுவத்தில் சேர ஒப்புக்கொண்டுள்ளார். 16 நாட்கள் பயிற்சியைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட இவர், தனது தளபதியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வெறும் மூன்று நாட்களில் உக்ரைன் படையிடம் சரணடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் சண்டையிட விரும்பவில்லை. எனக்கு ஊதியமாக 1.5 மில்லியன் ரூபிள் தருவதாகக் கூறினார்கள், ஆனால் எந்தப் பணமும் தரவில்லை. ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்வதை விட உக்ரைன் சிறையிலேயே இருந்து விடுகிறேன். அங்கே உண்மை என்பதே இல்லை’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து முறையான தகவல் எதுவும் வரவில்லை என்றும், இதுகுறித்த தகவல்களை சரிபார்த்து வருவதாகவும் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Related News