தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் வாங்கிய விவகாரம் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

சென்னை: போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 23ம் தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கடந்த மாதம் 28 ம் தேதி நடிகர் காந்த் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி அன்று நேரில் ஆஜராகவில்லை.

Advertisement

பின்னர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படிஸ்ரீகாந்த் நேற்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது போதை பொருள் வாங்க கானா நாட்டு ஏஜெண்ட் ஜான் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் ஆகியோருக்கு பணம் அனுப்பிய விபரங்கள் குறித்தும், சினிமா முன்னணி நடிகைகள் பலர் ஜிபே மூலம் பணம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர். அதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணை நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை நீடித்தது.

Advertisement