தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரில் சிக்கிய பைக்கை இழுத்து சென்ற போதை வாலிபர்: தீப்பொறி பறந்ததால் பரபரப்பு

திருமலை: வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதிய காரில் சிக்கிய பைக் அரை கி.மீ. தூரம் இழுத்துச்சென்றதால் தீப்பொறி பறந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் அட்டாங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாகவும் தாறுமாறாகவும் சென்றது. அப்போது எதிரே வந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீதும் கார் மோதியது. ஒரு பைக் காரின் அடியில் சிக்கி கொண்டது. அதில் வந்தவர் தூக்கி வீசப்பட்டார். அப்போதும் நிற்காத கார், பைக்கை இழுத்து சென்றது. இதனால் தீப்பொறி பறந்தது. இந்த சம்பவத்தில் 4பேர் காயமடைந்தனர். நரசராபேட்டையைச் சேர்ந்த ஒருவரின் கால் முற்றிலும் நசுங்கியது. காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Advertisement

இதற்கிடையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாறுமாறாக சென்ற காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சிலர் பைக்குகளில் சுமார் அரை கி.மீ. தூரம் விரட்டிச்சென்று காரை தடுத்து நிறுத்தினர். வாகனத்தை ஓட்டிய வாலிபரை பிடித்தனர். அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம் பிடித்து வைத்திருந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பிடுகுரல்லா ஐயப்பா நகரைச் சேர்ந்த சைதா வலி (25) என்பதும் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சைதாவலியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement