தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் கடத்தல்காரன் செல்போனில் 800 இளம்பெண்களின் நிர்வாண படங்கள்: பலரை பலாத்காரம் செய்து பணம் பறித்ததும் அம்பலம்

திருமலை: ஆந்திராவில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குண்டூரில் போதைப்பொருட்களை கடத்தியது தொடர்பாக ஒரு சிலரை சிறப்பு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியான குண்டூரை சேர்ந்த மஸ்தான்சாகிப் (32) என்பவரை தேடிவந்தனர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
Advertisement

கடந்த 2 மாதங்களாக போலீசாரின் பிடியில் சிக்காமல் அவர் தப்பித்து வந்த நிலையில் அவரை நேற்றுமுன்தினம் சிறப்பு அமலாக்கபிரிவு போலீசார் கைது செய்து குண்டூருக்கு அழைத்து வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சுமார் 800 கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை ஆந்திராவுக்கு கடத்தி வந்து அதனை கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து விற்று வந்துள்ளார். குறிப்பாக மாணவிகளிடம் நைசாக பேசி போதைப்பொருட்களை விற்பதோடு, அவர்களையும் போதைக்கு அடிமையாக்கி தனது வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல பெண்களை நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

வசதி படைத்த இளம்பெண்களிடம் நிர்வாண படத்தை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரின் காதலியை மடக்கிய சாகிப்: கைதான போதைப்பொருள் விற்பனையாளர் மஸ்தான் சாகிப்புக்கும், பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் காதலிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனையறிந்த நடிகர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது காதலை முறித்துக்கொண்டார்.

Advertisement

Related News