தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூர் அருகே இரவு முழுவதும் விழிப்புடன் காத்திருப்பு: டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை தீவிரம்

சூலூர்: சூலூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை டிரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் கடந்த 12ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தை எங்கே சென்றது? என தெரியாமல் பொதுமக்களும், வனத்துறையினரும் குழப்பத்தில் இருந்தனர். மேலும் சிறுத்தை வந்து சென்ற இடங்களில் கேமராக்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாய் கார்டன் பகுதியில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்தனர். இதையடுத்து மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நேற்றிரவு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறிய முயன்றனர். இதற்காக நேற்றிரவு டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 11 மணி முதல் கேமரா மூலம் தேடியும் சிறுத்தையின் இருப்பிடம் தெரியவில்லை. தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் விழிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement