தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்டுநர்-நடத்துனர் பணியிடங்களுக்கு 27ம் தேதி எழுத்து தேர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களின் கோட்டங்கள் மூலமாக தினசரி 22 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான ஓட்டுநர்கள் - நடத்துனர்களுக்கான காலி பணியிடங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் நிரப்பப்படாமல் இருந்தன.
Advertisement

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் விரைவு போக்குவரத்து கழகங்களில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டதுடன் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணிநியமனமும் வழங்கப்பட்டன. இதையடுத்து 3,274 ஓட்டுநருடன் நடத்துனர் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதன்படி, மாநகர போக்குவரத்து கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 ஆகிய பணியிடங்களுக்கான இடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏப்ரல் 21ம் தேதி விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஓட்டுநர் - நடத்துனர் பணிக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு எழுதுவதற்கான நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) வரும் 21ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எழுத்து தேர்வுகள் முடிவடைந்த பின்னர், செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement