தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.66.78 கோடியில் குடிநீர் குழாய்கள் அமைப்பு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 265 மி.லிட்டர் குடிநீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

Advertisement

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கும் இரண்டாவது பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்கப்படுவதால் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் 265 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் கூடுதல் மையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் நிறைவடைந்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இது ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது’’ என்றார்.

Advertisement