தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனவு ஆசிரியர் திட்டம் மூலம் கல்விச் சுற்றுலா: பிரான்ஸ் நாடு சென்று திரும்பிய பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

Advertisement

சென்னை: கனவு ஆசிரியர் திட்டம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய ஆசிரியர்கள் அங்கு பின்பற்றும் கல்வி முறை, கற்பிக்கும் நடைமுறையை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் தனி திறன்பெற்று விளங்குபவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறன்மேம்பாட்டுக்கு மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 3 நிலைகளாக நடைபெற்ற தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 23ஆம் தேதி பிரான்ஸ் அழைத்து செல்லப்பட்டனர். 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர்கள் அங்குள்ள கல்வி முறை, கலாச்சாரம், தனிமனித ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கண்டு வியந்ததாக கூறினர். குறிப்பாக பிரான்ஸ் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படும் கல்வி முறை, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை, மாணவர்களின் தனி திறன்களை அடையாளம் காணும் யுக்தி உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டதாக கூறும் ஆசிரியர்கள் அவற்றை எளிய நடைமுறையில் தமிழக மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர். கனவு ஆசிரியர் திட்டம் மூலம் தங்களது கனவு நெனவானதாக கூறும் ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி வருங்கால ஆசிரியர்களுக்கு புது உத்வேகம் அளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று நன்றி தெரிவித்து கொண்டனர்.

 

Advertisement