தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திராவிட இயக்கத்தின் தீவிர பற்றாளர் இரா.ரத்தினகிரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், திராவிட இயக்கத்தின் தீவிரப் பற்றாளருமான இரா.ரத்தினகிரி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் தலைவராகச் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய ரத்தினகிரி, பதினோராவது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினர், பால்வளத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அகில இந்திய கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலாளராகவும் 18 ஆண்டு பணியாற்றியுள்ளார்.

Advertisement

அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க வரலாற்றை விவரிக்கும் ”கலைஞர் கருவூலம்” காட்சியகத்தை அமைத்து கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். காட்டூரில் கலைஞர் கோட்டத்தின் உருவாக்கத்திலும் துணைநின்றவர். 1976 முதல் இன்றளவும் திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் பெரியார் நாட்குறிப்பையும் ரத்தினகிரி வெளியிட்டுள்ளார். பெரியார் இயக்கம் மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினகிரியை, அண்மையில் தஞ்சை சென்றபோது நலம் விசாரித்ததை நினைவு கூர்கிறேன். அத்தனை பணிகளிலும் முழுஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திச் செயல்பட்ட ரத்தினகிரியை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement