தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நாட்டிற்கே முன்னோடியாக உள்ளன: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

 

Advertisement

ராணிப்பேட்டை: மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.24.34 கோடியிலான 6 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ராணிப்பேட்டையில் ரூ.43.74 கோடி மதிப்பீட்டிலான 115 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்; மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிர் விடியல் பயணத்தின் மூலம் 820 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.900 முதல் ரூ.1000 வரை பெண்கள் சேமிக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு. நிதி நெருக்கடியிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் கூடுதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நாட்டிற்கே முன்னோடியாக உள்ளன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை, பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்துகின்றன என்று கூறினார்.

Advertisement