தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

 

Advertisement

ஈரோடு: அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு அடித்தளமான தந்தை பெரியாரை தந்த இந்த ஈரோட்டுக்கு, திராவிட இயக்கத்தின் முதன்மைத் தொண்டனான நான் பெருமையோடு இங்கே வந்திருக்கிறேன். ஈரோட்டுப் பூகம்பம் தந்தை பெரியார் இல்லையென்றால், திராவிட இயக்கம் இல்லை; அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; ஏன், தமிழ்நாட்டிற்கு இந்தளவுக்கு வளர்ச்சியும் இருந்திருக்காது. ஈரோட்டைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது, மஞ்சள் நகரம்! சந்தன நகரம்! தொழில் நகரம்! ஜவுளி நகரம்! கைத்தறி நகரம்! இயற்கை நகரம்! விடுதலை வீரர்களைத் தந்த நகரம்! இத்தகைய பெருமைமிகு ஈரோட்டில், இந்த அரசு விழாவை சிறப்பாக மிகுந்த சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கிறார் நம்முடைய கழகத்திற்கு கிடைத்த ‘நல்லமுத்து’ அமைச்சர் முத்துசாமி! அமைதியானவர்! அடக்கமானவர்! அதே நேரத்தில், ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிப்பதில் ஆற்றல்மிக்கவர்! இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், அனுபவத்தால் மூத்தவர்! உழைப்பினால் இளைஞர்!

இந்த நிகழ்ச்சியை மாபெரும் மாநாட்டைப் போல ஏற்பாடு செய்திருக்கின்ற அவருக்கும், அவருக்குத் துணை நிற்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி அவர்களுக்கும், அதுபோல மாவட்டத்தின் அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! இந்த மாபெரும் விழாவில், 91 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 235 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு, 278 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று, 605 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்றைக்கு எனக்கு கிடைத்திருக்கிறது!

இந்த விழாவில், கலந்து கொள்ள என்னிடம் தேதி கேட்டபோது, “கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் அறிவித்த 12 அறிவிப்புகளின் ஸ்டேட்டஸ் - நிலை என்ன?” என்று நான் கேட்டேன். அதிகாரிகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள், அறிவிப்புகள் எல்லாம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில், 106.78 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தோம். 79.83 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் டிசம்பர் 10-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த விழாவிற்கு வந்தோம், அறிவித்தோம் என்று இருக்க மாட்டேன்! அத்தனை அறிவிப்பையும் செயல்படுத்திக் காட்டக்கூடிய அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு! கடந்த 4 ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு திமுக ஆட்சிக் காலத்தில் செய்து தரப்பட்டுள்ள திட்டங்களைச் சொல்வதாக இருந்தால் அதற்கே ஏறக்குறைய 2 - 3 மணி நேரம் ஆகும். எனவே தலைப்புச் செய்தியாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

· ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தை திறந்து வைத்திருக்கிறேன்.

· ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லான் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைத்து, அதை திறந்து வைத்துவிட்டுதான் இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன்.

· ஈரோடு வட்டம், கங்காபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

· குறுங்குழுமம் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

· அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாட்டு பணிகளுக்காக இதுவரை 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

· கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில், 195 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 177 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 18 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

· ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

· நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு திட்டங்களின்கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில், 944 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

· 17 ஊரகப் பாலங்கள், 73 நெடுஞ்சாலைப் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

· ஈரோடு மண்டலத்தில், 400 திருக்கோயில்களில் 554 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 150 திருக்கோயில்களில் 218 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.

· கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், 133 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

· சத்தியமங்கலம் பால் குளிரூட்டு நிலைய வளாகத்தில் கட்டு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு அமைக்கப்பட்டு வருகிறது.

· கரட்டுப்பாளையத்தில் விடுதியுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் கட்டும் பணி நிறைவுற்று, துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களால் இந்த ஈரோடு மாவட்டத்தில் மட்டும் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் தெரியுமா? நான் பெருமையோடு சொல்கிறேன்….·4 லட்சத்து 9 ஆயிரத்து 354 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. விடுபட்ட மீதமுள்ளவர்களுக்கும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அதுவும் வழங்கப்பட இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

· 59 ஆயிரத்து 262 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

· 51 ஆயிரத்து 70 சுய உதவிகுழுக்களுக்கு 3 ஆயிரத்து 203 கோடி ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

· மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 8 இலட்சத்து 65 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

· இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 9 ஆயிரத்து 262 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

· 5 ஆயிரத்து 865 பெண்கள் திருமண உதவி பெற்றிருக்கிறார்கள்.

· 12 ஆயிரத்து 819 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டிருக்கிறது.

· ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில், 12 ஆயிரத்து 819 தாய்மார்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

· காலை உணவுத் திட்டத்தால், 53 ஆயிரத்து 716 மாணவர்கள் பசியில்லாமல் படிக்கிறார்கள்.

· புதுமைப் பெண் திட்டத்தில், 48 ஆயிரத்து 801 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உதவித்தொகை கிடைக்கிறது.

· 57 ஆயிரத்து 763 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் தரப்பட்டிருக்கிறது.

· 3 ஆயிரத்து 771 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கான தேதி கேட்டு வந்தபோது நம்முடைய அமைச்சர் முத்துசாமி அந்தப் பகுதியில் நிறைய பேருக்கு பட்டா பிரச்சினை இருக்கிறது என்று ஒரு கோரிக்கையுடன் வந்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்துக்குட்பட்ட 29 கிராமங்களில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர், நில ஒப்படை வழங்கப்பட்ட சுமார் 6000 ஏக்கர் பட்டா நிலங்களை, தமிழ்நிலம் பதிவேடுகளில் “நிபந்தனைக்குட்பட்ட பட்டா” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்ற அரசாணை வெளியிட்டுவிட்டு அந்த மனநிறைவோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 680 நில உடமைதாரர்கள் பயனடையப் போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்னும் பெருமையுடன் சொல்கிறேன்… ஈரோட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 491 கோடி ரூபாய்க்கு 68 லட்சத்து 85 ஆயிரத்து 232 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 3 ஆயிரத்து 836 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து 488 வளர்ச்சி திட்டப்பணிகளும், 9 ஆயிரத்து 327 கோடி ரூபாய்க்கு செய்திருக்கிறோம். இத்தனை திட்டங்களை செய்திருக்கிறோம் என்ற பட்டியலிட்டு சொன்னாலும், இந்த நிகழ்ச்சியில் புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா! வெளியிடாமல் சென்றால் இங்கே இருப்பவர்கள் என்னை சும்மா விட்டுவிடுவார்களா! எனவே, இந்த ஈரோடு மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு -

புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு, 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவிலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு, 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு -

பவானிசாகர் மற்றும் கீழ்பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின்கீழ், திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தர பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று, இந்த 90 கிராமங்களில் உள்ள, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும்.

மூன்றாவது அறிவிப்பு -

அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும்!

நான்காவது அறிவிப்பு -

சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து ஆராய, வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு -

பெருந்துறையில் தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

ஆறாவது அறிவிப்பு -

அந்தியூர் மற்றும் எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும். இப்படி நாம் தினந்தோறும் தொடர் திட்டங்களைத் செயல்படுத்துவதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன சொல்வது என்று தெரியாமல், விரக்தியில் பிரம்மைப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசும் போது, "சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட - ‘பால்வளத் தந்தை’ சி.கு.பரமசிவம் அய்யா அவர்களின் திருவுருவச் சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும்" என்று அறிவித்தேன்.

விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்த, பால் விநியோக முறையை நவீனப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவர். தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள் அனைத்துமே அவர் விதைத்த விதையின் விளைச்சல். அத்தகைய பெரும் ஆளுமைக்கு நன்றி செலுத்த சொன்னபடியே, சித்தோடு பால்பண்ணை வளாகத்தில் அவருடைய திருவுருவச் சிலையை நிறுவி இருக்கிறோம். தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி அவர்கள் பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

“நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்! நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்துவிட்டார்கள். பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? பிரதமர் அவர்களே! மோடி அவர்களே! தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் பிரதமர் மோடி அவர்களே என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே?

தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன். பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம்! சென்னையை போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது. 2011 மக்கள்தொகையை கணக்கில் வைத்து, நிராகரித்திருக்கிறார்கள். இப்போது 2025-ஆம் ஆண்டு! சென்சஸ் எடுத்தால் 20 இலட்சத்திற்கு அதிகமாக இருக்கும்.

இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டு ஆகி இருக்கும். வட மாநிலத்தில், 20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து இயக்குகிறார்கள். தமிழ்நாடு என்றால் மட்டும் கம்பி கட்டுகின்ற கதையெல்லாம் சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க. 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்' என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள். அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்?

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க. ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது? தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர் அவர்கள், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும். இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது! எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்! இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்! சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார். “கலைஞர்” பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, ஆளுநர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும்.

உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்! நேற்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்! 2024-25-ஆம் ஆண்டில், புதிய வழித்தடத்துக்கு ரயில்வே துறையால், 31 ஆயிரத்து 458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடிதான் ஒதுக்கியிருந்தார்கள். அதாவது, ஒரே ஒரு பர்செண்ட்! ஒவ்வொரு முறையும் நம்முடைய பிரதமர் அவர்களை நான் சந்திக்கும்போதும், மறக்காமல் நான் வைக்கின்ற முக்கியமான கோரிக்கை - தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்ற புதிய ரயில் திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கை என்ன? இந்த, ‘ஒன் பர்செண்ட்’ நிதி ஒதுக்கீடுதான்! இதற்கு என்ன அர்த்தம்? “வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது பாஜக-வின் ஆட்சி!".

இதிலிருந்து பா.ஜ.க. நமக்கு சொல்லாமல் சொல்லுகின்ற மெசேஜ்! அரசியல் லாபங்களுக்காக பொதுமக்களை பழிவாங்கும் இந்த அற்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தொடர் தோல்வியை அளித்துக் கொண்டிருக்கிறது. முதுகெலும்பை இழந்து கர்சீப்பால் முகத்தை மூடிவிட்டு சுத்துகின்ற மாண்புமிகு பழனிசாமி அவர்களின் துரோக அரசியல்தான் அவருக்கு, ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்ற பட்டப்பேரை பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம். அதுவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கின்ற தொல்லைகள், செயற்கை பேரிடர்கள் அதையும் மீறியும் நிறைவேற்றுகிறோம்.

ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குறோம். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் அடுத்த மாதத்தில் இருந்து வழங்க இருக்கிறோம். அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். இந்த சாதனைச் சரித்திரம் தொடரத்தான் போகிறது. உங்களின் அனைத்து கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நான் நிச்சயம் செய்து கொடுப்பேன்! உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம்! மக்களுக்கும் கழக அரசுக்குமான பாசப்பிணைப்பைப் பார்த்து, அதைக் கெடுக்க சதி செய்கிறார்கள். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மக்களின் வாக்குரிமையையே பறிக்கலாமா என்று பார்க்கிறார்கள்.

நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது அதுதான் இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது! ஏனென்றால், திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! கழக ஆட்சிதான் மீண்டும் அமையும்! தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தங்கு தடையின்றி இரு மடங்கு வேகத்துடன் தொடரும்! அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன் என்று கூறினார்.

Advertisement

Related News