தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது

*மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம்

Advertisement

செங்கம் : திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார்.செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் 18 வார்டு கழக செயலாளர்கள், 22 பூத் கமிட்டி பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி தலைவர் சாதிக்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செங்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாராயணசாமி கலந்துகொண்டு பேசுகையில், ‘எதிர்வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியில் அமர வைத்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க நம் அனைவரும் ஒன்று இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து மு.பெ.கிரி எம்எல்ஏ பேசியதாவது: செங்கம் நகரில் 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செங்கம் நகர மக்களுக்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் செங்கம் நகரம் கிருஷ்ணாபுரம் முதல் ஆனைமங்கலம் வரை திராவிட மாடல் அரசு நகரப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி உள்ளது. மேலும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம், புதிய பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் என புதிய கட்டடங்களை அமைத்து செங்கம் பகுதி மக்களுக்கு வசதி ஏற்படுத்தியது திராவிட மாடல் அரசு.

பத்தாண்டு காலமாக நடைபெறாத திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. செங்கம் நகரப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக உள்ள செங்கம் போளூர் சாலைக்கு நகரின் வெளிப்பகுதியாக புறவழிச் சாலை அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. செங்கம் நகரம் பத்தாண்டுகளாக பின்தங்கியே இருந்தது ஆனால் திராவிட மாடல் அரசு அமைந்த உடன் செங்கம் நகரம் தற்பொழுது வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா, செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர செயலாளர் சதானந்தம், நகர நிர்வாகிகள் முருகன், முத்துகிருஷ்ணன், செந்தில்குமார், சீனிவாசன், மணி (எ) பெரியதுரை, பழகடை பாலு, மாவட்ட நிர்வாகிகள் வில்சன் ரஜினிகாந்த், ஸ்ரீதர், அப்துல்வாகித், நகர மன்ற உறுப்பினர்கள் சந்தியா, இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News