தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்து திமுக உரிய நிவாரணம் பெற்று தரும்: என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேட்டி

சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக சட்டத்துறைத் தலைவர் இரா. விடுதலை தலைமை தாங்கினார். சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. முன்னிலை வகித்தார்.

Advertisement

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், சூர்யா வெற்றிக்கொண்டான், ஜெ.பச்சையப்பன், துணைச் செயலாளர்கள் பெ.ரகு, சந்திரபோஸ், என்.மருதுகனேஷ், ராஜாமுகமது, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன், கே.மறைமலை, சுவை சுரேஷ், எஸ்.எஸ்.மனோஜ், மூ.தினேஷ்குமார், எம்.எஸ்.பி.வீரமணி, மீஞ்சூர் கே. சுரேஷ், எ. கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி: 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் இறந்தவர்கள், குடிமாறியவர்கள் பட்டியலில் வருகிறார்கள். இரண்டையும் சேர்த்தால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வருகிறார்கள். இதில் யாரெல்லாம் முறையற்ற வகையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால், திமுக சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுத் தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News