தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரதட்சணை கொடுமை அதிகரிக்கிறது குடும்ப வன்முறையால் பெண்கள் இறந்ததாக பதிந்த வழக்கு எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தலால் கடந்த 2016ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி மஞ்சுளா, ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளம் குடும்பங்கள் தான்.
Advertisement

ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேராக பெண்கள் தான் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உட்பட அனைவரும் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர். வரதட்சணை கொடுமை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு குடும்ப பெண்கள் ஆளாகி வருவது அதிகரிக்கிறது.

இந்த நடைமுறை சமுதாயத்தின் கட்டமைப்பை தகர்ப்பதாக உள்ளது. எனவே அரசுக்கு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் வழங்க முடிவு செய்கிறது. ஆகையால், கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற குடும்ப வன்முறைகளால் பெண்கள் இறந்தது குறித்து எத்தனை வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது உள்ளிட்ட விபரங்களை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Advertisement