தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவரை பழிவாங்க வரதட்சணை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்வதாக உச்சநீதிமன்றம் கவலை!!

டெல்லி : வரதட்சணை வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது, அப்பாவி மக்கள் தேவையில்லாமல் துன்புறுத்துவதை தடுக்க விசாரணை நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அதிக சம்பளம் பெரும் மனைவி, விவாகரத்திற்கு பிறகு பராமரிப்பு தொகையாக 4 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அந்த தொகையை குறைக்க பெண் நீதிபதி லஞ்சம் கேட்டதாகவும் அதில் கூறியிருந்தார். தன் மீதும் குடும்பத்தினர் மீதும் மனைவி குடும்பத்தினர் வரதட்சணை புகார் கொடுத்தனர் என்றும் அடுக்கடுக்கான புகார்களை வீடியோ பதிவில் சுபாஷ் தெரிவித்திருந்தார்.
Advertisement

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்த நிலையில், வரதட்சணை புகார் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கணவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பழிவாங்க வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்வதாக கவலை தெரிவித்தனர். பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏ பிரிவு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர்கள், ஆனால் அதனை பயன்படுத்தி கணவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்திருப்பதாக கூறினர். கொடுமைக்கு ஆளாகும் போது, பெண்கள் புகார் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்றும் கூறினர். திருமண உறவில் பிரச்சனை ஏற்படும் போது, கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொய்யான புகார்களை கூறுவது தடுக்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு கேடயம் அதையே ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்திய அவர்கள், இதனால் சட்டத்தின் நோக்கமே நீர்த்து போவதாக கவலை தெரிவித்தனர்.

Advertisement

Related News