தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரட்டை கொலையை ஸ்டேட்டஸ் வைத்த ஏட்டு, 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). இவரது உறவினர் விவசாயி மந்திரம் (50). இருவரும் கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 25ம் தேதி இரவு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த உறவினரான கோமு(65) தனது மனைவி, மகனை பிரித்ததாக தகராறு செய்து, அரிவாளால் இருவரையும் வெட்டி கொலை செய்தார்.

Advertisement

கோமு இருவரையும் அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் விசாரித்தார். இந்த வீடியோ காட்சிகளை கயத்தாறு ஏட்டு பால்தினகரன் மற்றும் ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் அஜ்மீர்காஜா முகைதீன், அருண்குமார் ஆகியோர் தங்களது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஆக பதிவு செய்து வலைத்தளங்களில் பரவச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.

Advertisement