தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீண்டும் வரப்போகிற டபுள் டக்கர் பஸ்.. புதியதாக 625 மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.!!

Advertisement

சென்னை: சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னைக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏசி, தாழ்தள பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் டபுள் டக்கர் பேருந்து மீண்டும் வலம் வரப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள் கடந்த 2023ம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் 625 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News