மீண்டும் வரப்போகிற டபுள் டக்கர் பஸ்.. புதியதாக 625 மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.!!
Advertisement
இந்நிலையில், சென்னையில் டபுள் டக்கர் பேருந்து மீண்டும் வலம் வரப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள் கடந்த 2023ம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் 625 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த பிறகு பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement