தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீலகிரி முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை: சுமங்கலா யானைக்கு காயம்

 

 

கூடலூர்: முதுமலை முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளன. இங்கு குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அபயாரண்யம் முகாமில் சுமங்கலா (37) மற்றும் சங்கர் (34) உள்ளிட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலையில் சுமங்கலா மற்றும் சங்கர் ஆகிய 2 யானைகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த சங்கர் யானையின் பாகன் விக்னேஸ்வரன் சண்டையில் இருந்து 2 யானைகளையும் பிரித்து விட முயன்றுள்ளார். ஆனால் 2 யானைகளும் பாகனை தாக்கியதாக தெரிகிறது. சண்டையில் சுமங்கலா யானைக்கு உடலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சுமங்கலா யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். யானையின் உடலில் கூர்மையான ஆயுதம் குத்தியதால் ஏற்பட்ட காயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் சுமங்கலா யானை ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News