தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்கலாம்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

Advertisement

மதுரை: வீட்டுப் பணியாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சீதாலெட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் வீட்டு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ரைஸ் மில் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், கனிமம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், பீடி, ரப்பர் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு தனி சட்டங்கள் உள்ளது.

ஆனால் வீட்டுப்பணியாளர்களுக்கு என தனி சட்டம் இல்லை. வீட்டுப் பணியாளர் நலன் தொடர்பாக மாநில அரசுகளே சட்டங்களை நிறைவேற்றலாம். மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீட்டுப்பணியாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக சிறப்பு சட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு பெண்கள் ஆணையமும் பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்றுமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் மனித உரிமை ஆணையத்தின் கடிதத்தின் பேரில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு சிறப்பு சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக பரிசீலித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Advertisement