தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி சார்பில் தல்லாகுளத்தில் நாய்கள் காப்பகம்

*பணிகளை கமிஷனர் ஆய்வு

Advertisement

மதுரை : மதுரையில் மாநகராட்சி சார்பில் புதிதாக நாய்கள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு வெள்ளைக்கல் மற்றும் செல்லூர் பகுதியில் செயல்படும் மாநகராட்சியின் நாய்கள் காப்பகத்தில் கருத்தடை மற்றும் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் இப்பணிக்காக மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 தல்லாகுளம் டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாய்கள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.

இக்காப்பகத்தில் ஒரு கூண்டிற்கு இரு நாய்கள் வீதம் மொத்தம் 60 நாய்கள் அடைப்பதற்கு தனித்தனியாக கூண்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மற்றும் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசிகள் போடப்படும். மேலும் நாய்களை பராமரிக்க தேவையான கால்நடை மருத்துவர்களும் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில், நாய்கள் காப்பகம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமானதாகவும், அதேநேரம் விரைவாக முடித்து வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவிப்பொறியாளர் அமர்தீப் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement