தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

டெல்லி: நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நாய்கடி பாதிப்பு இந்தியா முழுவதுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை தற்போது நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரேபிஸ் வராமலிருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நெறிமுறைகள் வெளியிட்டது.

Advertisement

*நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு அல்லது சுத்தமான ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

*ஆல்கஹால், அல்லது வீட்டில் கிருமிநாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை நன்றாக கழுவ வேண்டும்.

*வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் நாய், பூனை என பிற விலங்குகளாக இருந்தாலும் சரியான நேரத்தில் அந்த செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

*நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி ரேபிஸ் தடுப்பூசி அனைத்து தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

*நாய் கடியால் மூட நம்பிகையை தடுத்து நாய் கடித்த பக்கத்தில் மிளகாயோ, கடுகு எண்ணெயோ அல்லது வேறு எந்த பொருட்களையோ அல்லது யூடியூப் , இன்ஸ்டாகிராம் மற்றும் மூட நம்பிக்கையை பார்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

* உடனடியாக நாய் கடித்தவுடன் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் எனவும். அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டிலேயேஇதுவரை 3லட்சத்து 70ஆயிரம்க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு ரேபிஸ் நோய் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது.

 

Advertisement