தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா..? இல்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள்: கேரளா ஐகோர்ட் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த பகுதியில் மீள் கட்டமைப்பு பணிகள் மிகபெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீள் கட்டமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்பர்வையிட்டனர். அது தொடர்பாக வழக்கில் கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக உயர்நீதிமன்றம் சாடியுள்ளது.

Advertisement

இந்த வழக்கின் ஒரு பகுதியாக வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்க கூடிய கடன் தொகை நிலுவையாக உள்ளது. அந்த கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என வாதத்தை முன்வைத்தனர். இதில் மிகுந்த ஏமாற்றமடைந்த உயர்நீதிமன்ற அமர்வு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். அதில் நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் அமர்வு நீண்ட பட்டியலை கொண்ட கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதில், கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா..? மனமில்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள். உங்களுடைய கருணையை எதிர்பார்த்து இந்த மாநில மக்கள் இல்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற இக்கட்டான சூழலில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் கூட எங்களால் உதவ முடியாது என வெளிப்படையாக கூறிவிட்டால் அந்த மாநில மக்கள் எந்த இக்கட்டான சூழலிலும் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதை குறைந்தபட்சம் மக்கள் தெரிந்துகொள்வார்கள். அதை சொல்வதில் என்ன பிரச்சனை உள்ளது.

எற்கனவே தெளிவுபடுத்திய பின்பும் ஒன்றிய அரசு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டு விதிகளின் பின்னால் ஒளிந்துகொள்ள கூடாது. குறைந்தபட்சம் இதுபோன்ற சூழலில் மனம் இறங்கி அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரவேண்டும். அதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றிய அரசு விதிகளின் பின்னால் சென்று ஒளிந்துகொள்கிறது என்ற கருத்தை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

இதேபோல் இயற்கை பேரிடர் நிகழ்ந்த போது பாஜக ஆளக்கூடிய குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வாறு முன்வந்து ஒன்றிய அரசு உதவிகளை வழங்கியது போன்ற கட்டுரைகளை எல்லாம் நீதிபதிகள் படித்துகாட்டினர். இந்த வழக்கில் சம்பந்தபட்ட வங்கிகளை இணைக்க வேண்டும். கடன் தொகையை செலுத்த அந்த மக்களை நிர்பந்திக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Related News