தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்: 2 பயணிகளிடம் விசாரணை

Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைசாவடி பகுதியில் நேற்றிரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த 2 பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைசாவடி மையம் அமைந்துள்ளது.

இவ்வழியே சென்னையில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இவ்வழியே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அதிகளவில் போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எளாவூர் சோதனைசாவடி அருகே நேற்றிரவு ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்பேருந்தில் 2 பயணிகளிடம் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.1.10 கோடி மதிப்பில் 68 கிலோ எடையிலான வெள்ளி நகைகளை சூட்கேஸ் பெட்டியில் வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆந்திர பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 கோடி வெள்ளி நகைகள் எடுத்து வந்த பயணியை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆவடி அருகே திருமுல்லைவாயலை சேர்ந்த யோகேஷ் (32), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிரதீப் (18) எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் வெள்ளி நகைகளை கடத்தி வந்தார்களா, இதன் உரிமையாளர் யார், இதற்குரிய ஆவணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி நகைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 2 பேரிடமும் வணிகவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement