தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த 2 மருத்துவர்கள் கைது: பயங்கரவாத சதிக்கு திட்டமா என விசாரணை

பஹ்ரைச்: நேபாள எல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 2 மருத்துவர்களை பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். டெல்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையின் ரூபைதிஹா சோதனைச் சாவடியில் நேற்று காலை சசஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி) படையினரும், மாநில காவல்துறையினரும் இணைந்து வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேபாளத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஹசன் அம்மான் சலீம் (35) மற்றும் இந்திய மாநிலமான கர்நாடகாவின் உடுப்பியை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் வம்சாவளி சுமித்ரா ஷகீல் ஒலிவியா (61) என்பதும், இருவரும் மருத்துவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இந்தியாவிற்குள் நுழைவதற்கான முறையான விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் எதுவும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது, ‘நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாக’ கூறியுள்ளனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைய முயன்றதற்கான தெளிவான காரணத்தை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும், இவர்களது உண்மையான நோக்கம் என்ன, இவர்களின் பின்னணி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் பயண விவரங்கள் குறித்து காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News