திருப்பத்தூர் மாவட்டத்தில் பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி பெண் சிசு கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கர்பிணி பெண்களுக்கு குறிவைத்து இந்த கருகலைப்பானது நடந்துவருகிறது.
கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என கண்டு அறிந்து அந்த குழந்தைகளை பெண் குழந்தை என்றல் அதனை கருகலைத்து இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டிருந்தது. கடந்த ஒரு 5 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த காகங்கரை பகுதியில் 8 கற்பனி பெண்கள் ஆட்டோவில் வரும் பொழுது ஆட்டோ பழுதாகி நின்ற நிலையில் அங்கு விசாரணை செய்யும் போது கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என கண்டு அறிய வந்தோம் என்று தெருவித்தனர்.
அதன் பிறகு ஊர்பொதுமக்கள் அவர்களை பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்து. அதன் பிறகு போலீசாரயின் விசாரணையில் இதற்காக செயல் பட்ட முக்கிய மூளையாக செயல் பட்ட ப்ரோக்கர்களை 4 பேரை கைது செய்து வெள்ளோர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதில் மூளையாக செயல் பட்ட லேப் டெக்னீசியன் என்பவர் சுகுமார் என்பவர் ஸ்கேன் டெக்னீசியன் அக பணியாற்றி வருகிறார்.
இவர் வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆன பெண்ணா என கண்டு அறிந்து அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யபட்டதும் தெரியவந்தது. இந்த சுகுமார் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு இவர் தற்போது வெளிய வந்துள்ளார்.
வெளிய வந்த பிறகு இதேபோல இந்த கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என கண்டறியும் மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். தற்போது இவரை கந்திலி போலீசார் கைது செய்து வெள்ளோர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.