தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகரிகத்தை பற்றி எடப்பாடி பேசுவதா? கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கடும் தாக்கு

சென்னை: நாகரிகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது என்று கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பதில் அளித்துள்ளார்.
Advertisement

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவதாக பழனிசாமி என்னை அழைத்தார் என திருமாவளவன் சொல்லி பல நாட்களாகி விட்டன இன்று தான் பழனிசாமி வாய் திறக்கிறார். துரைமுருகனை பார்த்து இவர் பரிதாபப்படுகிறாராம். சீனியாரிட்டி பேசும் இவர், இவருக்கு முன்னே 2 முறை முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்சை விட்டு, 1977 முதல் எம்எல்ஏவாக, மாவட்ட செயலாளராக 1980 முதல் இருந்து வரும் செங்கோட்டையனை விட்டுவிட்டு முதல்வரானது ஏன்?

மூத்தோர் ஆர்.எம்.வியை அழைத்து கொடுத்திடாததை, பண்ருட்டி, பொன்னையனிடம், அன்வர் ராஜாவிடம், முத்துசாமி, திருநாவுக்கரசிடம் போகவேண்டியதை தடுத்து நீங்கள் எப்படி வந்தீர்கள்? துணை முதல்வர் பதவியை இளைஞர் சமுதாயத்திடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும் என சீனியர் பேராசிரியர் சொல்லி எப்படி தளபதி துணை முதல்வர் ஆனாரோ. அப்படித்தான் துரைமுருகனே கூறித்தான் உதயநிதி துணை முதல்வர் ஆனார். இதெல்லாம் காலில் தவழ்ந்து வந்தவருக்கு புரியாது. சரோஜாதேவி மறைவிற்கும் அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை. மு.க.முத்துவின் மரணத்திற்கும் அதிமுகவினர் யாரும் வரவில்லை எதார்த்தத்தையும், நாகரீகத்தையும் பற்றி பழனிச்சாமி பேசக்கூடாது.

பழனிச்சாமிக்கு உண்மையான நெஞ்சுரம் இருக்கும் என்றால் துணை ஜனாதிபதியை கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு கேட்க வேண்டும். துணை ஜனாதிபதியாக ஒ.பி.எஸ்சை அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு, இரண்டு கட்சியையும் ஒன்று சேர்க்கிற வழியை பழனிசாமி பார்க்கட்டும்.

Advertisement

Related News