திமுக நிர்வாகி அடித்துக்கொலை
Advertisement
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அங்கிருந்த உடற் பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையால் பிரித்விராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து சௌந்தர் மற்றும் ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே, மாடிக்கு சென்ற மூவரும் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், அவரது குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பிரித்திவிராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு கதறினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான பிருத்திவிராஜ், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வந்தார்.
Advertisement