தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக நிர்வாகி அடித்துக்கொலை

திருச்சி: திருச்சியில் திமுக நிர்வாகி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர்களது மகன்கள் ரமேஷ்(46), பிருத்திவிராஜ்(48). இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சென்றனர். இதன் பின்னர் பிற்பகல் 1 மணியளவில் பிரித்விராஜ், ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சௌந்தர் ஆகிய மூவரும் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
Advertisement

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அங்கிருந்த உடற் பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையால் பிரித்விராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து சௌந்தர் மற்றும் ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே, மாடிக்கு சென்ற மூவரும் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், அவரது குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பிரித்திவிராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு கதறினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான பிருத்திவிராஜ், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வந்தார்.

Advertisement