தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் போது ரேஷன் அட்டை, ஆதாரை ஆவணங்களாக பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

Advertisement

புதுடெல்லி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, டி.எம்.செல்வகணபதி, தங்க தமிழ்செல்வன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், முரசொலி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர்களை இன்று சந்தித்தனர். அப்போது பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அனைவரும் டெல்லியில் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, தேர்தலில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள், புதிய நடைமுறைகள் உள்ளிட்டவை தொடர்பான கருத்துக்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் தனித்தனியாக கருத்துகளை கேட்டு வந்தது.

திமுகவிடமும் கருத்தையும், ஆலோசனையையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அப்போது திமுக தரப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும்போது மக்கள் இலகுவாக ஆவணங்களை வழங்க ஏதுவாக நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டை, ஆதார் ஆவணங்களை பெற வேண்டும். இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து விரைவாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணிவிட்டு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை எண்ண வேண்டும்.

தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் ஆங்கிலம், இந்தி போன்று தமிழிலும் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலை மாநிலத்தில் பல வாக்குச்சாவடிகளில் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்தையும் பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் போது ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றை ஆவணமாக பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவற்றை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், ஓரிரு மாதங்களில் தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் என்று தெரிவித்தார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News