தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; ரகுமான்கான் எழுத்துக்கும் பேச்சுக்கும் ரசிகன் நான்; அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளர்.

Advertisement

ரகுமான் பேசக்கூடிய கூட்டங்களில் நான் விரும்பி பங்கேற்பது உண்டு. அவரது பேச்சு தமிழ்நாடு முழுவதும் இடிமுழக்கமாகவும், வெடி முழக்கமாகவும் எதிரொலிக்கும். திறமைசாலியை கண்டால் அரவணைத்து வளர்ப்பார் கலைஞர். கலைஞரின் அன்பையும், மக்களின் நம்பிக்கையும் பெற்றவர் ரகுமான் கான். அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம் தான். நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமித் ஷா நேற்று மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தனர். இதற்கு முன்பு சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை எதிர்த்தது போல் நேற்று தாக்கல் செய்த நட்கள் சட்டத்தையும் எதிர்ப்போம். திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என்று கூறினார்.

Advertisement