தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுகவிற்கு துணை நிற்கும் மதிமுக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: வைகோ பேட்டி

Advertisement

கோவை: திமுகவிற்கு துணை நிற்கும் மதிமுக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வைகோ கூறினார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: ஜூன் 22ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை முடிவு செய்ய உள்ளோம். உலகில் இருக்கும் மொழியியல் வல்லுநர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோர் உலகின் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். சமஸ்கிருதத்தில் இருந்து எல்லா மொழிகளும் வந்தது என அமித்ஷா ஆணவத்துடன் கூறுகிறார். ஆனால் அந்த மொழியை வெறும் 24 ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். கமல்ஹாசன் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தை இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது.

உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என யார் சொன்னாலும், தமிழ்தான் பழமையான மொழி.தமிழகத்தில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்ல திருப்பம். மதுரை முருகன் மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் நடத்த, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையாக தோன்றியதை எல்லாம் பேசுகின்றார். அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. பாமகவில் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்னை. அது குறித்து பேச விரும்பவில்லை. மதிமுக சார்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல், பாராளுமன்ற சுவர்களிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உள்ளங்களிலும் பதிந்து இருக்கிறது. திமுக மாநிலங்களவை பொறுப்பை 6 ஆண்டுகளாக கொடுத்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்துத்துவா சக்திகளால் திராவிட இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை தகர்க்க, திமுகவை பலப்படுத்துவது தான் வழி என முடிவெடுத்து இருக்கிறோம். மதிமுக திமுகவிற்கு துணை நிற்கும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, எதிர்காலத்திலும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement