தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுகவை மிரட்டிப்பார்க்கவே அமலாக்கத்துறை ஊழல் புகார்: அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

திருச்சி: திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக ஊழல் புகார்களை அமலாக்கத்துறை கூறுகிறது என அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமலாக்கத்துறையினர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின் போது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அது குறித்து ஆய்வு செய்யுமாறும் தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அமலாக்கத்துறை செய்யலாம். தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

விசாரணையில் நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். அதிமுக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார். முக்கியமாக, எஸ்ஐஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும், ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும் , நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement